தமிழ்நாட்டில்  கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தக்காளி விலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று முன்தினம் ரூ. 130 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று  கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால், சில்லறை வணிக கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி விலை கிலோ 120 வரை உயர்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு, விவசாயிகளிடம் நேரடியாக தக்காளி கொள்முதல் செய்து, இன்று முதல் சென்னையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 60க்கு விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் ரூ. 100-க்கும் குறையாமல் விற்பனையானாலும், ரேஷன் கடைகள், சுமை பண்ணை கடைகளில் ரூ. 60க்கு தக்காளி விற்கப்படும்.