அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வளையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.

இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையம் பின்புறம் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் பின்புறம் led திரைகள் அமைக்கப்பட்டு வீடியோ காட்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 20 லட்சம் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.