அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி இன்று நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் மாநாடு குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்று அம்மா சொன்னது போல் தற்போது நடக்க உள்ள துரோகிகளின் மாநாட்டோடு பொருந்துவது போல் உள்ளது.

தம்பி பெரும் பணம் செலவழித்து தோரணங்களும் தொகைகளும் ஓவியங்களும் கொண்டு மாநாடு நடத்தி பயன் எதுவும் வராது. சாதனைகளை காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும் நோட்டுகளை காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவு தான் தம்பி அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.