முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியின பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்.

இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக நில நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களோடு கலந்தாலோசித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பிரதம மந்திரி முன்னோடி கிராமத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.