தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டத்துக்காக புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி  மாவட்டத்தின் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய சாத்தான்குளம் வட்டத்தின் வடக்குபத்து, பள்ளக்குறிச்சி ஆகிய கிராமங்கள் திருச்செந்தூர் வட்டத்தின் மாதவன் குறிச்சி கிராமம் உள்ளடக்கிய பகுதிகளில் ஏவுதளம் அமைய உள்ளது.

இந்த நிலையில் அலுவல் ரகசியங்கள் சட்டம் 1923 பிரிவு இரண்டில் உள்ள விதிகளின்படி இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாத நபர்கள் இந்த பகுதியை பயன்படுத்துவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.