தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களை அடிப்படை மதிப்பீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனை தான் நுழைவுத் தேர்வு என்று தவறாக பொருள் கொண்டு விட்டதாக பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட போவதில்லை என்பதையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர். மாவட்டத்திற்கு 240 மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.