தமிழகத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உறுதி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு சார்பாக www.labour.tn.gov.in/ism/என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் உள்ளிட்டோர் விளக்க கூட்டங்கள் நடத்தி தொழிலாளர்களிடம் உறுதி அளித்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.