இன்று காலை முதல் இபிஎஸ் – அண்ணாமலை இடையேயான மோதல் போக்கு வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து சற்று முன் தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் அண்ணாமலை. அவரது தாயார் மறைவு குறித்து கேட்டறிய வந்ததாக அண்ணாமலை கூறியிருந்தாலும் இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் அடுத்து என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.