தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 44 இடங்களில் இடங்களில் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கி இருந்த நிலையில் தற்போது இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.