தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கு ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.