நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என டாஸ்மார்க் நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் நான்காம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.