செப்டம்பர் 18ஆம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக செப்டம்பர் 17ஆம் தேதி அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு செல்வோர் திரும்பி வருவதற்கும் திட்டமிட்டு செல்லுங்கள்.