தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக 1.5 கோடிக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு கோடி ரேஷன் அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஏற்கனவே முதல்வர் அறிவித்திருந்த நிலையில் நாளை இது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடைபெற உள்ளது. எந்த விண்ணப்பங்களை நிராகரிப்பது என்று நாளை முடிவு செய்யப்பட உள்ளது.