தமிழகத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. கனமழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறையை அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குளம், குட்டை, ஆறுகள் மற்றும் ஓடைகள் போன்ற நீர் நிலைகளுக்கு மாணவர்கள் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.