தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை தொடரும். மழை காரணமாக நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.