நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, இவர் போடா போடி திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி, தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தநிலையில், ரசிகர்களின் பாராட்டை பெரும் அளவிற்கு, முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதில் நடிக்க தயார் என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஒரு படத்திற்கு கதைதான் ஹீரோ என தான் நம்புவதாக குறிப்பிட்ட வரலட்சுமி, நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பது தான் தனது நோக்கம் என தெரிவித்தார். மேலும், வித்தியாசமான வேடத்தில் நடித்தார் வரலட்சுமி என ரசிகர்கள் பாராட்ட வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் அவர் தெரிவித்தார்.