கடந்த 2012 ஆம் வருடம் தமிழகத்தில் விஐடி பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர் கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் கீழ் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுடைய உயர் கல்விக்கு உதவும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தின் மூலம் சுமார் 7,449 பயன்பெற்றுள்ளனர். தற்போது 2023 கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை பெறுவதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் மே 22ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெறலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனோடு உரிய ஆவணங்களை இணைத்து மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் 215, டாக்டர் எம்ஜிஆா் பிளாக், விஐடி வளாகம், வேலூர் – 632014 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.