தமிழகத்தில் மாதம்தோறும் அனைத்து மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படுவது வழக்கம். ஆனால் அதனை முன்கூட்டியே மிவாரியம் சார்பாக பொதுமக்களுக்கு தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் இந்த டிசம்பர் 25 திங்கள் கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதன்காரணமாக அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் மின் தடை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இன்றும் (டிசம்பர் 24) மின்தடை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.