தமிழகத்தில் தஞ்சை, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்ததால் பெரும் சேதங்களை மக்கள் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். மேலும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தடையற்றை வழங்குவதை உறுதி செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.