நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதோடு இன்று மற்றும் நாளை உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38-40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தமிழகத்தில் வருகிற 25-ம் தேதி வரை பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.