தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து தற்போது குடிநீர் பாட்டில்களையும் விற்பனை செய்யவிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஒப்பந்த புள்ளி போடப்பட்டுள்ளது. மேலும் PET பாட்டில்கள் மூலம் 1000/500 மில்லி வகைகளில் ஒரு நாளைக்கு 1 லட்சம் பாட்டில்கள் வரை விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.