சென்னை மதுரவாயல் அருகில் போரூரில் தி.மு.க ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பேசியதாவது
“கர்நாடக தேர்தல் தோல்வி அவமானத்தை மறைக்க பா.ஜ.க அரசு ரூ.2000 செல்லாது என்று பொருத்தமற்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

அனைத்து வாக்குகளையும் பா.ஜ.க பெறவேண்டும் எனும் காரணத்தில் தமிழகத்தின் வீராதி வீரர் சூராதி சூரர் அண்ணாமலை அங்கு தேர்தல் களப்பணி மேற்கொண்டார். எனினும் அங்கு வெறும் 10 ஓட்டு பாஜக பெற்றது. அண்ணாமலை கைராசிக்காரர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேலி செய்தார். கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் தோல்வி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி ஆகும். எனினும் இது திமுகவிற்கு எழுச்சி” என்று அவர் கூறினார்.