தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணெய் இணைப்பதற்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் 100% ஆதார் இணைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 100% ஆதார இணைப்பை பதிவு செய்த முதல் மாவட்டம் என்ற பெருமையை தேனி மாவட்டம் படைத்துள்ளது. மேலும் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு ஜனவரி 31ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.