பிரபல பேச்சாளரும் அரசியல் மூத்த தலைவருமான நாஞ்சில் சம்பத் உடல் நல குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான வலிப்பு மற்றும் ஞாபக மறதி பிரச்சனையால் சமீப காலமாக அவதிப்பட்டு வந்த அவர் ஜனவரி 23ஆம் தேதி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ரயிலில் பயணித்த போது திடீரென மயக்கம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தற்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.