தமிழகத்தில் பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதனைப் போலவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே பத்தாம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் வெளியிடப்பட உள்ளது.

மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 29 வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 24 வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.