திமுக ஆட்சிக்கு வந்த 2 அரை ஆண்டுகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பெண்கள் இலவச பயணத்தை பயன்படுத்தி வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் பல லட்சம் பெண்கள் தினம்தோறும் இலவச பேருந்து திட்டத்தை பயன்படுத்தி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ராஜபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அமைச்சர் சிவசங்கர் என்று திறந்து வைத்த நிலையில் அப்போது பேசிய அவர், இதுவரை இலவச பேருந்துகளில் 375 கோடிக்கு பயணங்கள் நடைபெற்று உள்ளது. நஷ்டத்தில் இருந்து போக்குவரத்து துறையை திமுக அரசு மீட்டெடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.