தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 28 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை செப்டம்பர் 28 முதல் அறிவிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து  அக்டோபர் 9ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுடன் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில்  இன்று திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு மாணவர்களுக்கு பள்ளி திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.