பொதுவாக தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் விழாக்களின் போது மக்கள் பலரும் சொந்த ஊருக்கு பேருந்துகளில் பயணம் செல்வது வழக்கம். அதனால் பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல அரசு விரைவு பேருந்துகளில் நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருச்சி, திருப்பதி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் 1080- க்கும் மேற்பட்ட டீலக்ஸ் ஏசி வசதி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விரைவு பேருந்துகளில் இன்று முதல்  30 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று சேலம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.