தமிழகத்தில் பட்டாவில் பெயர் மாற்ற ஆயிரக்கணக்கானோர் தினம் தோறும் விண்ணப்பித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வீடு, மனை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டுமனைக்கான பத்திரம் மாற்றுவோர் கையோடு பட்டாவில் பெயர் மாற்றம் செய்கின்றனர். அதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில ஆண்டுகளை விட தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 1631 பேருக்கு நில அளவை பணிக்கான உரிமம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் தாலுகா அலுவலகங்களில் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் புதிதாக நியமிக்கப்பட்டவர்களால் இனி பட்டா பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் ஏற்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் லஞ்சம் வாங்க முடியாத அளவுக்கு வெளிப்படை தன்மையும் விதிமுறைகளையும் அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.