கட்சியில் முழுக்க ரவுடிகளையும் தேடப்படும் குற்றவாளிகளையும் சேர்த்துக்கொண்டு அடாவடித்தனத்தில் ஈடுபடுவதுதான், பாஜகவின் மாற்று அரசியலா? உங்களைக் கேள்வி கேட்டால் இப்படிதான் அடிதடியில் ஈடுபடுவீர்களா? அடாவடித்தனமும் சர்வாதிகாரமும் மட்டுமே சித்தாந்தமாக உள்ளது.

மக்களின் கேள்விகளுக்கு பதில்சொல்லத் திராணியின்றி அராஜகத்தில்தான் ஈடுபடுவீர்கள் எனில், மக்களுடைய கேள்விகளை அதிமுக அனைத்து வெளிகளிலும் கேட்கும் என அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூரில் GST குறித்து கேள்விகேட்ட பெண்ணை பாஜகவினர் தாக்கியது குறிப்பிடத்தக்கது.