திருப்பூர் இடுவம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், நள்ளிரவு காட்சிகளை திரையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

பண்டிகை காலங்களில் தமிழகத்தில் நள்ளிரவு காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. நள்ளிரவு 1 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புதிய படங்கள் திரையிடப்பட்டு வந்த நிலையில், ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசு அனுமதி மறுத்து வருகிறது.