அதிக அளவிலான மின்சார உற்பத்தியானது நிலக்கரியின் மூலமாகத்தான் நடைபெற்று வருகிறது. ஆனால் நிலக்கரி இருப்பு குறைந்து வருவதால் அரசு அதற்கான மாற்று ஏற்பாடுகளை தீவிர படுத்த தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் மிகவும் பயனுள்ள வகையில் அதிக அளவிலான மின்சார உற்பத்திக்கு  உதவி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அக்டோபர் 4, 5, 2 ஆகிய தேதிகளில் ஐந்தாவது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் மத்திய மாநில அரசின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

இதில் காற்றாலை மின்சார உற்பத்தி மூலமாக கார்பன் வெளியேற்றம் இல்லாத மின்சார உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மின்சார உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் இதன் மூலமாக 6 முதல் 7 மாதங்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும்  விதமாக மின் உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிலேயே தமிழகத்தில் தான் காற்றாலை மின்சார உற்பத்தி திறன் முதல் இடத்தில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.