தமிழகத்தில் மாணவர்கள் உயர்கல்வி பயில பணம் தடையாக இருப்பதை தவிர்ப்பதற்கு மாவட்டம் தோறும் வங்கிகளை இணைத்து கல்வி கடன் முகாம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கல்வி கடன்களை  விடுவிக்கும் அளவு தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது.

எனவே அதிக அளவு கல்விக்கடன்களை வழங்குவதற்கு வசதியாக கடன் முகாம்களை நடத்த வேண்டும் என்றும் இந்த பணிகளில் ஈடுபடும் கள  அலுவலர்களை ஊக்குவித்து கூடுதல் கல்வி கடன்களை வழங்கி வழி செய்ய வேண்டும் என்றும் கல்வி கடன்களை வழங்குவதற்கு ஜாமீன் உத்தரவாதம் கூறக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.