வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கட்டணங்களை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை அடைந்துள்ளது. கட்டணம் அதிகரித்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நுழைவு கட்டணம் 200 ரூபாயாக உயர்த்துவதற்கும் பூங்காவை சுற்றி பார்க்கும் பேட்டரி வாகன கட்டணம் 150 ரூபாயாகவும் லயன் சபாரி மற்றும் மான் சபாரி சென்று பார்க்கும் வாகன கட்டணங்கள் 200 ரூபாய், கேமரா மற்றும் வீடியோ கொண்டு செல்வதற்கான கட்டணங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் என அனைத்து வகை கட்டணங்களும் ஓரிரு நாட்களில் உயர்த்தி அரசாணை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது