தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில் ஒரு கோடி 63 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் ஒரு கோடி பேரில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட ஐந்து நாட்களில் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி முதல் தவணை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் விண்ணப்பத்தின் நிலை குறித்து பயனர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.