தமிழகத்தில் இணையத்தில் மின்கட்டணம் செலுத்தும் போது போலி ரசீது வழங்கப்படுவதை தடுப்பதற்காக ஒரே மாடல் ரசீது வழங்கும் பணியை மின்வாரியம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. மின் கட்டண மையங்கள், இ சேவை மையங்கள் மற்றும் சில வங்கிகளில் மின்கட்டணம் தற்போது நேரடியாக செலுத்தப்படுகிறது. அதேசமயம் பாரத் பில் பே உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களிலும் மின் கட்டணத்தை செலுத்தலாம். மின்கட்டணம் ஐயங்களில் வழங்கப்படும் ரசீது வண்ணங்களில் இருப்பது மட்டுமல்லாமல் மின்வாரியத்தின் வங்கி கணக்கு ஏன் உள்ளிட்ட பல விவரங்கள் இடம் பெற்று இருக்கும்.

ஆனால் இணையத்தில் வழங்கப்படும் ரசீது வெள்ளை தாளில் விண்ணப்பதாரர் பெயர் மற்றும் கட்டண முள்ளிட்ட சில விவரங்கள் மற்றும் கணினியில் டைப் செய்தது போல இருக்கும். இதனால் தனியார் பிரவுசிங் சென்டரில் கட்டணம் செலுத்தவும் விண்ணப்பிக்கவும் செல்லும்போது அவற்றின் உரிமையாளர்கள் தங்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தி விடுவதாகவும் மின்வாரிய கணக்கிற்கு வருவதில்லை எனவும் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த முறை கேட்டை தடுப்பதற்காக தற்போது மையங்களில் கட்டணம் செலுத்தும் போது வழங்கும் ரசீது போலவே இணையதளத்திலும் செலுத்தும் கட்டணங்களுக்கு ஒரே மாடல் ரசீது வழங்கப்படுகின்றது.