தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், குறைந்த விலையில் மளிகை பொருட்களை மத்திய அரசு வழங்குவது வழக்கம். அதுபோன்ற சூழலில் உணவுத்துறை மூலமாக அவை கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு துறைக்கு வழங்கப்படும்.

கலைஞர் உரிமைத்தொகை பெறுவதற்கு புதிய குடும்ப அட்டைகள் கோரி பலரும் விண்ணப்பித்துள்ளனர். எனவே குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.