தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப விரல் ரேகை உள்ளிட்ட விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தனி முகாம்கள் நடத்தவும் தேவையின்படி வீட்டிற்க்கே சென்று புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை 63 சதவீதம் அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.