நாளை முதல் தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனுடைய காலாண்டு தேர்வு முடிவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டு வரை ஐந்து நாட்கள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் இரண்டு வரை 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து மாணவர்களுக்கும் 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்படும் நிலையில் இந்த வருடம் 5 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதால் காலாண்டு விடுமுறை தினத்தை அதிகரிக்க கோரி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அதிகரிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.