தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும். அவர் கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வருகிறார். தன்னுடைய பேச்சை நிறுத்தாவிட்டால் இனிமேல் ஐடி விங் மூலம் தாறுமாறாக நாங்கள் விமர்சிப்போம் என  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இந்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது.