தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகும் வெயிலின் தாக்கம் குறையாததால் தற்போது ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டடங்களின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். உறுதி தன்மையற்ற கட்டிடங்களை அகற்ற வேண்டும். பள்ளி அறையில் காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கழிப்பறைகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.