சென்னையில் விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் இடையே மெட்ரோ தடத்தில் அலுவலக நேரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே பரங்கிமலை மற்றும் சென்ட்ரல் இடையே அலுவலக நேரத்தில் பத்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போது மெட்ரோவில் தினமும் காலை ஐந்து மணிக்கு ரயில் சேவை தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படுகின்றது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் செய்ய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அவை வருகின்ற ஜூன் 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. வாகனங்களை நிறுத்திவிட்டு மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதற்கு பழைய கட்டணங்கள் வசூல் செய்யப்பட உள்ளது. வாகனங்களை மட்டும் நிறுத்தி விட்டு வெளியே செல்வோருக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய பார்க்கின் கட்டண உயர்வு வருகின்ற ஜூன் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.