தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் முடிவடைய இன்னும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்கலாம் என தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும். 6-12 ஆம் வகுப்பு வரை ஜூன்
1ஆம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1-5 ஆம் வகுப்பு வரை ஜூன் 5ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோடை வெயில் காரணமாக பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில், அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.