தமிழகத்தில் வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்யும்போது அதற்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்குவதற்கு தமிழக அரசு தற்போது ஆலோசித்து வருகின்றது. பொதுவாக வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதற்கான மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வை மற்றும் இரண்டு சதவீதம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது சொத்து வாங்கும் மகளிர்க்கு பத்திரப்பதிவில் சலுகை வேண்டும் என்று கோரிக்கை இழந்துள்ளது.

தமிழகத்தில்அதிகமாக உள்ள சொத்து விற்பனை காண பத்திரப்பதிவு கட்டணம் மற்றும் முத்திரை தீர்வையை குறைக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சமாக மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கான தீர்வை மற்றும் கட்டணங்களை குறைத்தால் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த சலுகை ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வருகிறது. எனவே தமிழகத்திலும் பத்திரப்பதிவில் இதனை கடைபிடிக்க தமிழக அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இதை தொடர்பாக அரசு பரிசிலீத்து வருவதாக கூறப்படுகிறது.