தமிழகத்தில் விடுமுறை நாட்களில் போலீசார் பணியாற்ற நேர்ந்தால் அவர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருந்தாலும் அவசர தேவையை கருதி விடுப்பில் இருக்கும் போலீசாரை பணிக்கு பலரும் அழைக்கின்றனர். இதன் காரணமாக வார விடுமுறை போய்விட்டது என போலீசார் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதனை போக்கும் விதமாக போலீசாருக்கு மாற்று விடுப்பு வழங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அவசர சேவை கருதி வார விடுப்பு நாட்களில் போலீசார் பணியாற்ற நேர்ந்தால் அவர்கள் வேறொரு நாளில் மாற்றி விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும் இதனால் அவர்களின் வார விடுப்பில் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.