தமிழகத்தில் ஆவினில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வரும் நிலையில் தற்போது கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு பதிலாக ஒரு லிட்டர் தரமான பாலுக்கு ஒரு ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. விவசாயிகள் ஆவினுக்கு பால் வழங்குவதை தொடர்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளால் பால் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இதனை அதிகரிப்பதற்காக சட்டசபையில் அறிவித்தபடி ஒரு ரூபாய் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. கொழுப்பு சத்து மற்றும் இதர சத்துக்கள் நிறைந்த தரமான பாலுக்கு ஒரு ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் உடனடியாக பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.