திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தலின் வாக்குப்பதிவின் போது 100 விழுக்காடு முஸ்லிம்களும்,  கிறிஸ்தவர்களும் வாக்களிக்க வர வேண்டும் என திருமாவளவன் எம்.பி வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும் தொடர்பாக பேசிய அவர், 2024 தேர்தல் மிகவும் ஆபத்தான கட்டத்தில் நாம் சந்திக்கிற தேர்தல்.  வாழ்வா ? சாவா ? என்கிற ஒரு போராட்டத்தை சந்திக்கின்ற ஒரு தேர்தல். மீண்டும் தப்பி தவறி பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை, இந்த நாட்டு மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது. அவர்கள் எடுத்த எடுப்பிலேயே அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார்கள்.

சனாதன தர்மத்தை, வர்ணாஸ்ரம தர்மத்தை, மனு தர்மத்தை அவர்கள் மீண்டும் அரசமைப்பு சட்டம் என்று பிரகடன படுத்துவார்கள். அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்து விடுவார்கள், தேர்தல் மீண்டும் வராது. ஆபத்தான தேர்தல்… இஸ்லாமிய ஆண்கள்  வாக்களிப்பதை போல…  பெண்கள் வாக்களிக்க வருவதில்லை என்கிற நிலை இருக்கிறது. தயவு கூர்ந்து, (  கையை கும்பிட்டு கேட்டுக்கொண்டார் )  ஒரு தோழமையோடு நான் வேண்டுகோள் விடுகிறேன்.

கிருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுகிறேன். தேர்தலில் 100 விழுக்காடு ஆண்கள் – பெண்கள் என்று அனைவரும்….  வெளிநாடுகளில் இருக்கிற அனைவரும் தேர்தலின் போது ஊருக்கு வர வேண்டும். உண்மையிலேயே நீங்கள்  மோடியை ஆட்சியில் இருந்து விரட்ட விரும்பினால்…  ஒருவர் கூட தேர்தலின் போது வெளிநாட்டில் இருக்க கூடாது, ஒருவரும் வீட்டிலே தங்கக் கூடாது. 100% வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.