திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.
கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற காணிக்கை எண்ணிக்கையில் ரொக்கமாக ரூ.2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 வருவாயாக கிடைத்துள்ளது. தங்கம் 1,025 கிராமும், வெள்ளி13,573 கிராமும், வெளிநாட்டு கரன்சி 878 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. இது 23 நாட்களில் கிடைத்த வருவாயாகும். உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின் போன்றவற்றையும் செலுத்தியிருந்தனர்.