தமிழகத்தில் தற்போது புதிய வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரகியவற்றை வாகன உரிமையாளர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டுமென அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்த சான்றிதழை இரண்டு நாட்களுக்குள் வந்து வாங்காவிட்டால் தபால் மூலமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது வாகன உரிமையாளர்கள் பெரும்பாலானோர் ஓட்டுனராக உள்ளனர், அதனால் தினசரி வேலையில் ஈடுபட வேண்டி இருப்பதால் அவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று சான்றிதழை முடியாத காரியம். இதனால் பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழை அங்கீகார கடிதத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும் ரெஜிஸ்டர் நடைமுறையில் புதிய வாகனங்களும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.