தமிழகத்தில் சமீப காலமாகவே மரங்களை வெட்டும் குற்ற சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்கு மரங்களை வெட்டினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை உடன் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய சட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.

இதற்கு முன்பு அனுமதி இன்றி தனியார் சொத்துக்கள் உட்பட எந்த நிலத்தில் இருந்தும் மரங்கள் அல்லது வனப்பொருட்களை வெட்டுவது மற்றும் அகற்றுவது குற்றமாகும். அப்படி மரத்தை வெட்டுபவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் என்ற டெல்லி வனச் சட்டத்தைப் போல தமிழகமும் தற்போது புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.